வெண்ணிலவே! தண்நிலவே! வானம் தன்னில்
விடியவிடிய உலாவந்து முகத்தைக் காட்டு;
கண்ணான எம்வீட்டு மழலைப் பூக்கள்
களிப்புடனே சோறுண்ண முகத்தைக் காட்டு;
பெண்ணவளின் முகவனத்தில் மெருகை யூட்ட
பிரித்தளித்து உன்பொலிவில் மங்கி னாயோ?
விண்ணில்உன் பிறை,நிறையாம் சிரிப்பைக் கண்டு
பித்தனான கவிஞன்தன் கவிதைப் பூவே!
மழலைகளுக்காய் விடியவிடிய நிலவை அழைப்பது அருமை :)
ReplyDeleteநேற்று நான் வானில் கண்ட பெளர்ணமியின் அழகை கண்மூடி தங்களின் கவிதை வரிகளின் வரியிலும் ரசிக்கிறேன்...
ReplyDeleteதொடர்ந்து உங்களுடைய எல்லா கவிதைகளையும் படிக்கும் ஆர்வத்துடன் நாங்கள்...
கவிதை மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
ReplyDelete@malarvizhi-myfavourites,
ReplyDeleteஇந்த அக்கா யாரு? ரொம்ப நாளா ஆள், விலாசம் இல்லாமல்... இப்ப திடீரென்று... பின்னூட்டம் இங்கே இடுவது...
ரொம்ப அருமையாய் எழுதியிருக்கிங்க!பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான வரிகள் ........
ReplyDeleteதொடருங்கள் தொடர்ந்து வருவோம் ..........